குளியல் தொட்டிக்குள் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

காத்தான்குடி – மாவிலங்கைத்துரையில் குளியல் தொட்டிக்குள் மூழ்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளது. 

இந்த சம்பவம் நேற்று(08) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குழந்தையின் தாய், குழந்தையை குளியல் தொட்டிக்குள் குளிக்க விட்டு ஆடைகளை கழுவிக் கொண்டிருந்த போது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version