கடலட்டை உற்பத்தியில் ஈடுபட்ட 08 பேர் கைது

கிளிநொச்சி நாகர் கோவில் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கிளிநொச்சியில் சட்டவிரோத கடலட்டை உற்பத்தியில் ஈடுபட்ட 08 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகர் கோவிலை அண்மித்த கடற்பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட சுமார் 540 கடலட்டைகளும் 04 டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரைச் சேர்ந்த 27 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப் பொருட்களுடன் சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version