அஞ்சல் மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பொதிகள் கிடைக்கப்பெற்றுள்ளமை தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித குறுஞ்செய்திகளும் அனுப்பப்படமாட்டாது என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொழிநுட்ப முறைகளை பயன்படுத்தி போலியான இலக்கங்கள் ஊடாக மக்கள் ஏமாற்றப்படுகன்றமை குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் திணைக்களத்தின் பெயர் மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரி சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்டு இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.

குறுஞ்செய்திகள் மூலம் வங்கி அட்டை மற்றும் கடனட்டை தகவல்களை திணைக்களம் கோராது என தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version