எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.