இந்திய மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று(19) நடைபெற்றது.
முதற்கட்ட வாக்குப்பதிவு 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்றது.
தமிழ்நாடு, அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரப் பிரதேசம் , உத்தராகண்ட், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் புதுச்சேரி, அந்தமான், நிக்கோபார், ஜம்மு – காஷ்மீர், இலட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் முதலாம் கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்றிருந்தன.
நேற்று(19) மாலை 5 மணி வரையிலான நிலவரப்படி, 60% வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிகளவான வாக்குப்பதிவு மேற்கு பெங்கால் மாநிலத்தில் 77% பதிவாகியிருந்ததுடன், குறைந்தளவான வாக்குப்பதிவு பிஹார் மாநிலத்தில் 46% பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தமிழ்நாட்டில் 62% வாக்குகள் பதிவாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்திய மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு எதிர்வரும் 26 ஆம் திகதி 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடங்கலாக 89 தொகுதிகளில் நடைபெறவுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் இந்திய மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குபதிவு எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளதுடன், வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4ம் திகதி முன்னெடுக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.