இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்படும் 10 ஆயிரம் பெருந்தோட்ட வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி,06 மாவட்டங்களின் பெருந்தோட்டப் பகுதிகளில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி தெரிவித்துள்ளார்.
பிரதேச செயலகங்கள் மற்றும் தோட்ட நிர்வாகங்களின் ஊடாக வீட்டுத் திட்டத்திற்குத் தகுதியானோர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
நிர்மாணப் பணிகள் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்கமைய வீடொன்றின் நிர்மானப் பணிக்கு 28 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது.
மேலும் இரண்டு வருடங்களுக்குள் 10,000 வீடுகளையும் மக்களுக்குக் கையளிக்க திட்டமிட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி மேலும் தெரிவித்துள்ளார்.