சுதந்திர கட்சியின் முக்கிய கலந்துரையாடல் இன்று 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக இன்று(25.04) மாலை விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு, கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். 

இதன்போது, கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version