முல்லைத்தீவு – நாயாறு கடற்பகுதியில் நீராடச்சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கடலில் நீராடச்சென்றநிலையில் அவர் காணாமற்போயுள்ளார்.
கடற்படையினரும் கொக்குளாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது
குறித்த நபர் இன்று காலை (29) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பகுதியை சேர்ந்த 43 வயதான குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.