யாழ்ப்பாணத்தில்,அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் இன்று (29) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அழிக்காதே அழிக்காதே எமது எதிர்காலத்தை அழிக்காதே, வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, வேலை வாய்ப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தி வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக ஐனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.