இறுதி ஓவர் த்ரில்லர் – ஒரு ஓட்டத்தினால் வெற்றி

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. 

ராஜஸ்தான் அணிக்கு இறுதி ஓவரில் வெற்றிக்காக 13 ஓட்டங்களைப் தேவைப்பட்ட நிலையில், புவனேஷ்வர் குமாரின் அபாரமாக பந்து வீச்சில் சன்ரைசர்ஸ் ஒரு ஓட்டத்தினால் வெற்றியீட்டியது.  

ஹைதராபாதில் இன்று(02.05) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  சன்ரைசர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதன்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

ஹைதராபாத் அணி சார்பில் நிதிஷ் ரெட்டி 76 ஓட்டங்களையும், டிரவிஸ் ஹெட் 58 ஓட்டங்களையும், கிளாசன் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

ராஜஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் அவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

202 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்களைப் பெற்று ஒரு ஓட்டத்தினால் தோல்வியடைந்தது. 

ராஜஸ்தான் அணி சார்பில் ரியான் பராக் 77 ஓட்டங்களையும், ஜெய்ஸ்வால் 67 ஓட்டங்களையும், ரோவ்மேன் பாவெல் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

ஹைதராபாத் அணி சார்பில் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், பட் கம்மின்ஸ், நடராஜன் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்படி, இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு ஓட்டத்தினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக  ஹைதராபாத் அணியின் புவனேஷ்வர் குமார் தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டிய ஹைதராபாத் அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் 12 புள்ளிகளுடன் 4ம் இடத்திற்கு முன்னேறியதுடன், ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.  

Social Share

Leave a Reply