இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூர் இன்று(04.05) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
குஜராத் அணி சார்பில் ஷாருக் கான் 37 ஓட்டங்களையும், ராகுல் திவாட்டியா 35 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பெங்களூர் அணி சார்பில் பந்துவீச்சில் சிராஜ், யாஷ் தயால், விஜயகுமார் வைஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
148 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.
பெங்களூர் அணி சார்பில் டி யு பிளசிஸ் 64 ஓட்டங்களையும், விராட் கோலி 42 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
குஜராத் அணி சார்பில் பந்துவீச்சில் ஜோசுவா லிட்டில் 4 விக்கெட்டுகளையும், நூர் அஹமட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்படி, இந்த போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியதுடன் போட்டியின் ஆட்ட நாயகனாக பெங்களூர் அணியின் சிராஜ் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் வெற்றியீட்டிய பெங்களூர் அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் 8 புள்ளிகளுடன் 7ம் இடத்திற்கு முன்னேறியதுடன், குஜராத் அணி 8 புள்ளிகளுடன் 9ம் இடத்தில் உள்ளது.