மட்டக்களப்பில் விபத்து – ஐவர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

கல்முனையிலிருந்து மகரகம நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றே இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்து பஸ் வீதியை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த சாரதி மற்றும் நடத்துநர் உள்ளிட்ட ஐவர் செங்கலடி மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version