விசா பிரச்சினையை வெளிக்கொணர்ந்த நபருக்கு எதிராக நடவடிக்கை 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்கும் பிரிவில் குழப்பத்தை ஏற்படுத்திய நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இன்று(06.05) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்கும் பிரிவில் ஏற்பட்ட குழப்பத்தை  பதிவு செய்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அண்மையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்கும் பிரிவில், ON-ARRIVAL விசா வழங்கும் செயன்முறை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்ததன்  காரணமாக ஏற்பட்ட தாமதத்தினால் விமான நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்ததுடன், அதனை நபரொருவர் காணொளியாக வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில், குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version