வவுனியா மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, மதுராநகர் பகுதியில் வசிக்கும் இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக கருத்து முரண்பாடுகள்
இருந்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் மதுராநகர் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
கோடரியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதையடுத்து குறித்த நபர் காயமடைந்துள்ளார்.
உறவினர்கள் வவுனியா வைத்தியசாகை்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துளதாக தெரிவிக்கப்படுகின்றது.