பண்டாரவளையில் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதம்

பண்டாரவளையில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்களுக்கிடையில் நேரசூசி குறித்து ஏற்பட்ட மோதல் காரணமாக நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வழமையான சேவையில் ஈடுபடும் பஸ்கள் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக பண்டாரவளை டிப்போ தெரிவித்துள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version