ஒக்டோபர் மாதம் 16ம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல்

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16ம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலை நடத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  

தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய குறித்த காலப்பகுதியில்  ஜனாதிபதி தேர்தலை நடத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அரசியலமைப்பு மற்றும் 1981ம் ஆண்டின் 15ம் இலக்க ஜனாதிபதி தெரிவு விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் வேட்புமனுக்கள் கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அறிக்கை வௌியாகியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version