5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கைநிலவும் சீரற்ற வானிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

குறித்த மாவட்டங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியதை தொடர்ந்து மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பலாங்கொடை இம்புல்பே பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முருங்கவத்த பகுதியில் பெய்த கடும் மழையினால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதுடன், சில இடங்களில் மண் மேடும் சரிந்து விழுந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version