மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்றைய தினம்(13.05) 4 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுக்கவுள்ளனர்.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவு தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தது.
இருப்பினும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமையினால் மீண்டும் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.