சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு 

சுகாதார துறையின் 72 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(14.05) சப்ரகமுவ மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.

அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதமே பணிப்புறக்கணிப்பிற்கு காரணம் என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று(14.05) காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சப்ரகமுவ மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த இந்த தொழிற்சங்க நடவடிக்கை கடந்த வியாழக்கிழமை வடமத்திய மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது மாகாணங்கள் தோறும் முன்னெடுக்கப்படுகின்றது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version