வடமேல் மாகாணத்தில் சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

தாதியர்கள் உள்ளிட்ட 72 தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்று(15) வடமேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன்படி, இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை வடமேல் மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகள் மற்றும் அனைத்து சுகாதார நிலையங்களில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சானக தர்மவிக்கிரம தெரிவித்துள்ளார்.

இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமே பணிபகிஷ்கரிப்பிற்கான காரணம் என சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நீதி தொடர்பில் சுகாதார அமைச்சின் கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் கடந்த வியாழக்கிழமை இந்த பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்தன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version