சுசித்ராவின் சர்ச்சைக் கருத்து- கணவரின் பதில்?

பின்னணி பாடகி சுசித்ரா சில தினங்களுக்கு முன்னர் அவரது முன்னாள் கணவர்
கார்த்திக்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

“கார்த்திக்குமார் நண்பர்களுடன் அடிக்கடி மும்பை சென்று விடுவார். அவர் ஓரினச்சேர்க்கையாளரா என்று
சந்தேகம் உள்ளது” என தெரிவித்திருந்தார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்நிலையில் சுசித்ராவின் குற்றச்சாட்டுகளுக்கு கார்த்திக்குமார் இவ்வாறு பதிலளித்துள்ளார்

“நான் ஓரின சேர்க்கையாளராக இருந்தால் அதற்காக வெட்கப்பட போவதில்லை. பாலியல் விடங்களில் நான் எவ்வாறான விருப்பத்தில் இருந்தாலும் அதை பெருமையாக கருதுகிறேன். அனைத்து பாலினங்களும் பெருமை மற்றும் ஆதரவுக்கு உரியவர்களே. இதில் அவமானம் எதுவும் இல்லை. என்று கூறி உள்ளார்.

இந்நிலையில், கார்த்திக் சுசித்ராவிடம் பேசும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதில், “நீ அசிங்கமாக பேசுகிறாய், இதெல்லாம் படிச்சவங்க பேசுற பேச்சு இல்ல. படிக்காத பட்டியலின பெண்கள் பேசுகிற மாதிரி நீ பேசுகிறாய். நீ ஏன் இந்த மாதிரி பேசுகிறாய் என்று தான் கேட்டேன். உன் வளர்ப்பு அப்படியில்லயே. உன் வளர்ப்பு நல்ல வளர்ப்புதான, நல்ல ஆச்சாரமான பிராமின் குடும்பத்தில் இருந்துதானே வந்த…” என்று கார்த்திக் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version