ஜனாதிபதி அடுத்த வாரம் இந்தோனேசியாவிற்கு விஜயம்

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின்
உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளார்.

10வது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட கூட்டம் இந்தோனேசியாவின் பாலி
நகரில் எதிர்வரும் 20 ஆம் முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version