இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த 7 இலங்கையர்கள் கைது 

இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 7 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி தென்கிழக்கு, தூத்துக்குடி கடலோரக் காவல் படையினரால் நேற்று(18.05) இலங்கை மீனவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் கடல் வழியாக தூத்துக்குடிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மத்திய, மாநில உளவுத்துறை விசாரணையை தொடர்ந்து இலங்கை மீனவர்களை இராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கடந்த 16ம் திகதி கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்களும் புழல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version