மேல் மாகாணத்தில் வைத்தியசாலைகள் ஸ்தம்பிதம் 

சுகாதார துறையின் 72 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(21.05) செவ்வாய்க்கிழை மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.

அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதமே பணிப்புறக்கணிப்பிற்கு காரணம் என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று(21.05) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மேல் மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த இந்த தொழிற்சங்க நடவடிக்கை கடந்த வியாழக்கிழமை வடமத்திய மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது மாகாணங்கள் தோறும் முன்னெடுக்கப்படுகின்றது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version