பொலன்னறுவை தேசிய பூங்காவின் கால்வாய் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த
07 காட்டு யானைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹந்தபன்வில வில்லுவாவின் கால்வாய் பகுதியில் ஏழு யானைகளின் உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8, 9, 10 வயதுடைய ஐந்து குட்டி யானைகளும், 30 மற்றும் 35 வயதுடைய இரண்டு பெரிய யானைகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளன.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் பின்னர் காட்டு யானைகள் ஓடை கால்வாயை கடக்கும் போது சேற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கலாமென வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.