52 சதவீதமான பஸ்களின் ஆயுட்காலம் நிறைவு 

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுள் 52 சதவீதமான பஸ்களின் ஆயுட்காலம் நிறைவடைந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இத்தகைய பஸ்களை மாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு தற்போது போதிய நிதி இல்லை எனவும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது  அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு செயல்முறை நிறைவடையும் வரை வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக்கொள்ள இயலாது என தெரிவித்துள்ள அமைச்சர், இந்திய கடன் உதவியில் 500 பஸ்களை பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version