ரயில் சேவைகள் தாமதம்

பல்லேவெல மற்றும் கனேகொட ரயில் நிலையங்களுக்கும் வெயங்கொட மற்றும் கம்பஹா ரயில் நிலையங்களுக்கும் இடையில் சமிக்ஞை கோளாறு காரணமாக பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே துணைப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலலை காரணமாக பிரதான, கரையோர மற்றும் புத்தளம் மார்க்கத்திலும் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் சமிக்ஞை கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சில ரயில்கள் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல ரயில் நிலையங்களுக்கு இடையில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version