சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மன்னாரில் கண்டல் தாவர நடுகை..!

சர்வதேச  சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு  மன்னாரில் இன்று (05/06) பிரதான பாலத்திலிருந்து
தள்ளாடி வரை காணப்படும் கரையோரப் பகுதிகளில் கண்டல் தாவரங்கள் நடுகை செய்யப்பட்டன.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலகம்
இணைந்து மெசிடோ நிறுவனத்தின் உதவியுடன் ஏற்பாடுசெய்யப்பட்ட இந்நிகழ்வில்  மன்னார் மாவட்டச் செயலாளர்
க.கனகேஸ்வரன்  சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு  கண்டல் தாவர நடுகையை  ஆரம்பித்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலாளர் ம.பிரதீப் ,மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ
உதவிப் பணிப்பாளர் கனகரத்தினம் திலீபன் ,மன்னார் மெசிடோ நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ,சுற்றுச்சூழல்
கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், மன்னார் மாவட்டச் செயலகம், மற்றும்  பிரதேச செயலகத்தின் பதவி நிலை
உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

நடுகைக்கான 300 கண்டல் தாவரங்களை  டினோஸா கண்டல் தாவரப் பள்ளி  (Dinosha Mangrove Nursery)வழங்கியிருந்தது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version