பாடசாலை சுகாதார அணையாடை வவுச்சர் வழங்கும் திட்டம் ஆரம்பம் 

பாடசாலை பெண் மாணவர்களுக்கு சுகாதார அணையாடைகளை(sanitary napkin) கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்கும் வேலைத்திட்டம் நாவலை ஜனாதிபதி மகளிர் கல்லூரியில் இன்று(06.06) ஆரம்பமானது.

பாடசாலை மாணவர்களின் வருகையை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த திட்டத்திற்காக சுமார் ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.  

இந்த திட்டத்திற்கு அமைய பாடசாலை பெண் மாணவர் ஒருவருக்கு  சுகாதார அணையாடை கொள்வனவு செய்வதற்கு 1,200 ரூபா வழங்கப்படவுள்ளது. பாடசாலைகள் ஊடாக வவுச்சர்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு முன்னதாகவே ஒழுங்கு செய்துள்ளது. 

இத்திட்டத்தின் கீழ் வருடம் ஜூன் மாதம் முதல் 06 மாதங்களுக்கு சுகாதார அணையடைகளுக்கான வவுச்சர்களை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பெருந்தோட்ட பாடசாலைகளுக்குள் உள்ளடங்கும் 07 தேசிய பாடசாலைகளுக்கும், அனைத்து மாகாணப் பாடசாலைகளுக்கும் சுகாதார அணையாடைகளுக்கான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version