வாகன இறக்குமதி தடையின் போது 44,000 வாகனங்கள் சந்தைக்கு வெளியீடு 

வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் 44,000 அதிகமான வாகனங்கள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த காலப்பகுதியில் சந்தைக்கு விடுவிக்கப்பட்ட 44,430 வாகனங்களில் 38,144 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6,286 கார்கள் உள்ளடங்குவதாக நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

இலங்கையில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் இவ்வாறு வாகனங்கள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அண்மையில் நிதியமைச்சில் உள்நாட்டு வாகன உற்பத்தியாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

இதன்போது வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதுடன், உள்நாட்டு வாகன உற்பத்தியாளர்கள் தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version