குணதிலக்க ராஜபக்ச மீதான தாக்குதல் – வெளியான புதிய தகவல்

குணதிலக்க ராஜபக்ச மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில்
இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரிடம் வாக்குமூலம் பதிவு
செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக
பொலிஸார் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சஹன் ப்ரதீப், மதுர விதானகே மற்றும் லலித்
வர்ணகுமார ஆகியோரிடமே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்குமூலங்கள் தொடர்பில் விரைவில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்சவின் மகன் நிலுபுல் ராஜபக்ச செய்த முறைப்பாட்டிற்கமைய
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அண்மையில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் தாக்குதலுக்கு உள்ளான நாடாளுமன்ற உறுப்பினர்
குணதிலக்க ராஜபக்சவின் கால் உடைந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தற்போது இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version