ஹம்பாந்தோட்டை, ஹுங்கம – திஸ்ஸ வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர்உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்றிரவு (09.06) பதிவாகியுள்ளது.
துப்பாக்கிய பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்தவர் 51 வயதுடையவர் ஆவார்.
அவர் தனது வீட்டின் முதலாவது மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.