அமெரிக்க ஜனாதிபதியின் மகன் குற்றவாளி என தீர்ப்பு..!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் போதைப் பொருட்கள் மற்றும் சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2018ஆம் ஆண்டு ஹண்டர் பைடனின் காரிலிருந்து கோல்ட் ரிவால்வர் துப்பாக்கி மற்றும் சட்டவிரோதமான போதைப் பொருட்களை ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி கண்டெடுத்துள்ளார்.

அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதையடுத்து, ஹாண்டர் பைடனின் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்றது.

விசாரணையில் ஹண்டர் பைடன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவரின் மகன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

வழக்கின் தீர்ப்பை ஏற்றுக்கொண்ட ஜோ பைடன், நீதிமன்றத்தின் நடைமுறைகளுக்கு மரியாதையளிப்பேன்” என கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version