இன்றைய வாநிலை..!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சிப் பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வாநிலை நாளை முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு
அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version