இலங்கை தொலைத் தொடர்புகள் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் தமக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றைய நடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளவாறு சட்டமூலம் திருத்தப்பட வேண்டும் என சபாநாயகர் நாடாளுமன்றுக்கு அறிவித்தார்.
அத்துடன்இ இந்த சட்டமூலத்தின் சில சரத்துகள் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.