சட்டமா அதிபரின் சேவை நீடிப்பு யோசனை நிராகரிப்பு

ஜனாதிபதியின் பரிந்துரைக்கமைய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னத்திற்கு 06 மாத சேவை நீடிப்பிற்கான அனுமதியை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை அரசியலமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (18) பிற்பகல் கூடியது.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணத்தின் பதவிக்காலம் இம்மாதம் நிறைவடையவுள்ள நிலையில் ஜனாதிபதியின் பரிந்துரை தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கு அரசியலமைப்புச் சபை உறுப்பினர்களுக்கு இடையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கு எதிராக 05 வாக்குகளும், ஆதரவாக 03 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அரசியலமைப்பு சபைக்கு தற்போதைய சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் யோசனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அரசியலமைப்புச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

அரசியலமைப்பு சபை இரண்டு தடவைகள் கூடியதுடன் இரண்டு சந்தர்ப்பங்களிலும் இந்த விடயம் தொடர்பில் இறுதி தீர்மானமின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில்,சட்டமா அதிபரின் பதவிக்காலத்தை மூன்றாவது தடவையாகவும் நீடிப்பதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அரசியல் சதி காணப்படுவதாக தெரிவித்து அந்த யோசனை தோற்கடிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version