தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் மின்சார சபை

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் இணைந்து இன்று (25/11) நண்பகல் முதல் சட்டப்படி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கு சொந்தமான கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியினை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மின்சார சபையில் நிலவி வரும் சில பிரச்சினைகளை சுட்டிக்காட்டியும் இந்த சட்டப்படி தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, தமது சகல கோரிக்கைகளுக்கும் முழுமையான தீர்வு கிடைக்கப்பெறும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் மின்சார சபை
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version