மாத்தளையில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே பலி

மாத்தளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

பலபத்வல, கிருலுகம பிரதேசத்தில் இன்று ச (22.06.) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியொன்றும் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோர் பயணித்த நிலையில் ஏனைய இருவரும்
அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் 54 வயதுடைய தாயும் 17 வயதான மகளுமே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த தாய் 54 வயதுயடைவர் என்றும் மகள் 17 வயது சிறுமி என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version