விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பிலிருந்து நீக்க பிரித்தானியா மறுப்பு

பிரித்தானியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து விதிக்கப்பட்டுள்ள
தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு பிரித்தானிய நீதிமன்றத்திற்கும் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் இந்த மேன்முறையீடு தொடர்பில் மனுதாரர்கள் தரப்பினர்களிடம் விரிவான சாட்சிய விசாரணைகளை,
குறித்த ஆணைக்குழு முன்னெடுத்திருந்தது.

தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணைக்குழுவில்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால், முன்வைக்கப்பட்ட இந்த மேன்முறையீட்டினை அந்த ஆணைக்குழு ஏகமனதாக நிராகரித்துள்ளது.

2001 மார்ச் 29ஆம் திகதி பிரித்தானிய இராஜாங்க செயலாளர் விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்யப்பட்ட
அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version