மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

மலையக மார்க்கத்திலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் மலையக மார்க்கத்தில் இன்று காலை மரமொன்ற முறிந்து வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மரத்தை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version