ஜனாதிபதியின் உரையை செவிமடுத்தோம். ஐக்கிய மக்கள் சக்தி எல்லா விடயங்களுக்கும் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. உரையை எழுதிக் கொடுத்தவர் யாரோ தெரியாது. சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு நாமே ஆரம்பத்தில் இருந்து கூறி வந்தோம் என எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(27.06) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த ஹர்ஷ டி சில்வா,
” நாம் எவ்வாறு செயற்பட்டோம் என்பதை ஜனாதிபதி அவர்கள் அதை கூறும் முன்னர் ஒருமுறை சிந்தித்து பார்த்திருக்க வேண்டும். ஆம் சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு நாமே ஆரம்பத்தில் கூறினோம். 2020 இல் பாராளுமன்றத்துக்கு வந்த முதல் நாளே இதை நாம் கூறினோம். இதனைப் புரிந்து கொள்ளுங்கள். சர்வதேச நாணய நிதியத்துடன் நாடு இணக்கப்பாடு கண்டதற்கு நாம் எதிராக வாக்களிக்கவில்லை.
பேச்சை எழுதியவர் சிலபோது இதனை அறிந்திருக்கவில்லை போலும், பேச்சை எழுதிக் கொடுத்தவருக்கு தெரியாது போல. சில திருத்தங்களை மேற்கொள்வோம் என்றே கூறினோம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பீட்டர் பீருவருடனான கலந்துரையாடலிலும் எவ்வாறு நாம் இதில் திருத்தங்களை ஏற்படுத்துவோம் என்பதை தெளிவாக தெரிவித்துள்ளோம்.
பிரதான இரு தரப்பு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களான சீன,ஜப்பன் இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளுடன் அதன் உத்தியோகபூர்வ கடன் தாரர்களுடன் இணக்கப்பாட்டை எட்டியதற்கு மகிழ்ச்சியடைகிறோம். நல்லதொன்று நடக்குமாக இருந்தால் நாம் அங்கும் இங்கும் இலங்கை தாயை இழுக்க, கை கால்களை உடைக்க நாம் தயாரில்லை. நாம் மக்களுக்கான எதிர்க்கட்சியாகும். இது எமது இராஜதந்திர உறவுகளினால் கிடைத்த ஒன்றாகும். லஸாட் மற்றும் கிளிபோர் சான்ஸ் நிறுவனங்களின் தலையீட்டினால் கிடைத்த ஒன்றல்ல.
ஜப்பானுடன் இணக்கப்பாட்டை எட்டியதற்கு இன்று கைதட்டிய, இன்று பெரிதாக பேசிவரும் தரப்பினரே ஜப்பானுக்கு அன்று கன்னத்தில் அறைந்து நாட்டை விட்டு விரட்டினர். சேமசிங்க, சப்ரி போன்றவர்ளின் அரசாங்கமே போ என்று கூறி விரட்டியது. இவர்களே ஆரம்பத்தில் இதனை எதிர்த்தனர்.
இந்தியாவுடன் எமக்கு பெரும் சகோதரத்துவ பிணைப்புள்ளது. ஜப்பான் எமது நீண்ட நட்பு நாடாகும். நாடுகளோடு நாம் பேணி வந்த நட்புகளாலயே இது எமக்கு கிடைத்தது.
இணக்கப்பாடு எட்டிய விடயங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கு ஆதரவு வழங்குமாறு கோரியுள்ளனர்.
அதன் உள்ளடக்கம் குறித்து அறிய வேண்டியுள்ளது. எத்தனை வருடங்களுக்கு சலுகைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது? 2028 வரை கடன் தவணைகளை செலுத்த வேண்டிய தேவை இல்லை என தெரிவித்திருந்தார். கடன் தவணைகளை காலம் தாழ்த்தும் போது வட்டி செலுத்த வேண்டுமா? இல்லையா? அதன் பிற்பாடு வட்டி விகிதம் என்ன? இது தொடர்பான விடயங்களை அறிய விரும்புகிறோம்.
சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்கள் அடங்களாக சர்வதேச வணிக்கடன் தரப்பினரோடு இதுவரை எந்த நிலையான இணக்கப்பாடுகளையும் எட்டவில்லை.
சரவதேச வணிக கடன் தாரர்கள் தற்போது முன்வைத்துள்ள விடயங்களுடன் இலங்கை இணக்கப்பாட்டை எட்டுமாக இருந்தால் இதற்கு நாம் எமது எதிர்ப்பை தெரிவிக்கிறோம். காரணம் அவர்கள் முன்வைத்துள்ள விடயங்கள் நாட்டுக்கு பாதகமானவைகளாகும்.
கடன் செலுத்தும் இயலுமையையே பார்க்கின்றனர். நிதி ஸ்திரதன்மையை மீட்டெடுக்கும் நிலை இங்கு அவதானிக்கப்படுகிறது.
புதிய இணக்கப்பாடு ஊடாக சில போது பரிமாறிக்கொள்கின்ற ஓர் நிலை ஏற்படும். இதனால் புதிய தரப்படுத்தல் நிலையை எட்டலாம். ஆனாலும் இதனை சுயாதீன தரப்படுத்தல் நிறுவனங்களே சுயாதீன மதிப்பீடுகளைக் கொண்டு இதை கூற வேண்டும். அரசியல்வாதிகளால் இதனை கூற முடியாது.
சர்வதேச நாணய நிதியம் புதிதாக முன்வைத்துள்ள இணக்கப்பாட்டறிக்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 40 டிரியன் என குறிப்பிடப்பட்டுள்ளது. hair Cut என்ன?
அரசாங்கமானது இந்த இணக்கப்பாட்டுடன் கடன் தள்ளுபடி 50% என்றனர், பின்னர் 30% என்றனர், இறுதியில் 28% எதிர்பார்க்கிறோம் என்கின்றனர். இது 2028 ஆம் ஆண்டிலிருந்தே நடைமுறைக்கு வரும். சர்வதேச நாணய நிதியம் புதிதாக முன்வைத்துள்ள இணக்கப்பாட்டறிக்கையின் பிரகாரம் நோக்குமிடத்து 28% இல் இருந்து 7% வரை குறைவடையும். இந்தளவு குறைந்த மட்டத்துக்கு உடன்பாட்டை எட்டியது நாட்டிக்கு நற்செய்தியல்ல. மக்களுக்கு பாதமே. இதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள பரிசீலனை பரிந்துரைகளின் பிரகாரம் முன்னோக்கி செல்லும் தீர்மானத்துக்கு வந்தால் இது குறித்து கலந்துரையாடலாம்.
இந்த இணக்கப்பாட்டை வைத்து தங்கையை காட்டி அக்காவை கொடுத்த கதையாக இதை ஜனாதிபதி ஆக்கிக் கொள்ளக்கூடாது.
இலங்கையைப் போன்றே அண்மையில் உடன்பாட்டுக்கு வந்த கானா நாட்டுக்கு 37% வீத தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
எமக்கு 28% என்று கூறி இறுதியில் 7% கடன் தள்ளுபடியே உண்மையில் கிடைத்துள்ளது” என தெரிவித்தார்.