முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக சீனாவிற்கு செல்லவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது சீனப் பிரதமர் மற்றும் சீனா வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது
சீனாவில் நடைபெறவுள்ள அரச நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக, சீன வெளிவகார அமைச்சரின் அழைப்பின் பெயரில் மஹிந்த ராஜபக்ஷ அங்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிகழ்வில் சீன ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ, சீனப் பிரதமர் மற்றும் வெளிவகார அமைச்சருடன் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை மற்றும் இலங்கைக்கான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.