கிளிநொச்சியில் நீரில் மூழ்கிய மாணவன் சடலமாக மீட்பு

கிளிநொச்சி – இரணைமடு குளத்தில் நீரில் மூழ்கி காணாமற்போன சிறுவன் சடலமாக இன்று (30.06) மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சிறுவன் நேற்று முற்பகல் தமது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் நீராடச் சென்றிருந்தபோது நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளார்.

இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர்,14 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version