சம்பந்தனின் மறைவிற்கு இந்தியப் பிரதமர் அனுதாபம்..

இரா.சம்பந்தனின் மறைவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்தப் பதிவில்

“அவருடனான சந்திப்புகளின் இனிய நினைவுகளை எப்போதும் நினைவு கூரப்படும். இலங்கையின் தமிழ் தேசங்களுக்கு அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கண்ணியம் நிறைந்த வாழ்க்கையை கிடைக்க அவர் இடைவிடாமல் போராடினார்”

இலங்கை மற்றும் இந்தியாவில் அவரை பின்தொடர்வோர் சம்பந்தனை இழந்து தவிப்பார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version