மன்னார் மடு அன்னையின் ஆடி மாதம் திருவிழா இன்று

மன்னார் மடு அன்னையின் ஆடி மாதம் திருவிழா இன்று (02) கொண்டாடப்படவுள்ளது.

மன்னார் மடுமாதாவின் திருச்சொரூபத்திற்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழாவையொட்டி நினைவு தபால் முத்திரை நேற்று திங்கட்கிழமை (01.07) காலை வெளியிடப்பட்டது.

மடு அன்னையின் திரு உருவம் பொறிக்கப்பட்ட முத்திரையே இவ்வாறு வெளியிடப்பட்டது.

மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.அன்ரனி ஞானப்பிரகாசம் அடிகளாரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

தபால் மா அதிபர் ரூவன் சத்குமாரவினால் விசேட முத்திரை மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையிடம் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், தபால் திணைக்கள அதிகாரிகள், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சத்துரி பிந்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version