இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீராங்கனையான விஷ்மி குணரத்ன, ஜூன் மாதத்திற்கான சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைக்கான 3 பேர் கொண்ட பரிந்துரைகளுள் ஒருவராக ஐசிசியினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா மற்றும் இங்கிலாந்தின் மாயா பௌச்சியரும் ஏனைய இரண்டு பரிந்தரைகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
2023ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியின் தலைவியாக செயற்பட்ட விஷ்மி குணரத்ன, கடந்த சில மாதங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார்.
அண்மையில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில், விஷ்மி குணரத்ன மூன்று போட்டிகளில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி மொத்தமாக 134 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன் தொடரின் சிறந்த வீராங்கனையாகவும் தெரிவி செய்யப்பட்டார்.
விஷ்மி குணரத்ன மூன்று போட்டிகளிலும் முறையே பெற்றுக்கொண்ட 40, 50 மற்றும் 44 ஓட்டங்கள், மேற்கிந்திய தீவுகள் அணியை வெள்ளையடிப்பதற்கு பெரும் பங்களிப்பினை வழங்கியிருந்தது.
மேலும், மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடரிலும் விஷ்மி குணரத்ன முக்கிய சந்தர்ப்பங்களின் போது அணிக்காக ஓட்டங்களை பெற்றுக் கொடுத்திருந்தார்.
18 வயதான அவர் ஜூன் மாதத்தில் சர்வதேச போட்டிகளில் மொத்தம் 195 ஓட்டங்களை விளாசியிருந்தார்.