ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதே சிறந்தது என்கிறார் சி.வி

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பது இலங்கைக்கு நன்மை பயக்கும் என தமிழ் மக்கள் தேசியக்
கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (05.07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில், தேர்தல் நடாத்தப்பட்டால் எந்தவொரு வேட்பாளரும் 50% வாக்குகளைப் பெற மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

தேர்தல் நாட்டின் தற்போதைய ஸ்திரத்தன்மையை மாற்றும். நாடு ஒரு மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளக்கூடும்,
இது நமது பொருளாதாரத்தையும் மோசமாக பாதிக்கும்.

நாம் பொருளாதாரத்தை மீட்டெடுத்து வருகிறோம். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் ஸ்திரமற்ற தன்மையை
உருவாக்குவது நமது நாட்டுக்கு கேடு.

மேலும் “தற்போதைய ஸ்திரத்தன்மை மற்றும் தேசத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு செயற்படுவதே
புத்திசாலித்தனம் என அவர் அறிவுறுத்தினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version