இலங்கை பயிற்றுவிப்பாளரானார் சனத் ஜயசூரிய 

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட்  உறுதிப்படுத்தியுள்ளது. 

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் வரை சனத் ஜயசூரிய இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. 

இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இருந்த கிறிஸ் சில்வர்வூட் அண்மையில் இராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது இலங்கை அணியின் ஆலோசகராக செயற்பட்டு வரும் சனத் ஜெயசூரிய தற்காலிகமாக பயிற்றுவிப்பாளர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை சனத் ஜயசூரிய இலங்கை அணியை சிறந்த முறையில் வழிநடத்துவார் என ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version