பணிப்பகிஷ்கரிப்பை தொடர்வதற்கு அதிரடி தீர்மானம் 

ரயில் நிலைய அதிபர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தாம் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காததால் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக ரயில் நிலைய அதிபர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

5 வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் பதவியுயர்வு வழங்கப்படாமை உள்ளிட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டி ரயில் நிலைய அதிபர்கள் நேற்று(09.07) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்திருந்தனர்.

இன்று(10.07) நண்பகல் 12 மணிக்கு பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் அனைவரும் சேவையில் இருந்து விலகியதாக கருதப்படுவார்கள் என ரயில்வே பொது முகாமையாளர் அறிவித்தவித்திருந்த நிலையில், ரயில் நிலைய அதிபர்கள் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version