விசா இன்றி தாய்லாந்து செல்வதற்கு இலங்கையர்களுக்கு அனுமதி

இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று (15.07) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கைகளுக்கமைய, ஒரு சுற்றுலாப் பயணி 60 நாட்களுக்கு விசா இன்றி நாட்டில் தங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா இன்றி தாய்லாந்திற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிட நிதி மற்றும் தங்களுடைய நாடுகளுக்கு திரும்புவதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும் என்பதுடன், அந்நாட்டின் குடிவரவு அதிகாரிகளின் ஒப்புதலைப் பெறுவதும் கட்டாயமாகும்.

தாய்லாந்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version